Published : 06 Dec 2021 03:09 AM
Last Updated : 06 Dec 2021 03:09 AM

குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் காவல் துறையினர் வழிப்பறியில் தொடர்புடையவரான நெமிலி வட்டம் காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்திர போஸ் (26) என்பவரை கைது செய்தனர். அதேபோல், நெமிலி காவல் துறையினரால் கீழ்வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சேதுபதி (23) என்பவரையும் வழிப்பறி வழக்கில் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி., டாக்டர் தீபா சத்யன் பரிந்துரை செய்தார். இதனையேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x