வேலூரில் -  தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு கடன் மேளா முகாம் :

வேலூரில் - தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு கடன் மேளா முகாம் :

Published on

வேலூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிறப்பு கடன் மேளா வரும் 8-ம் தேதி முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வேலூர் கிளை காந்திநகரில் உள்ள காட்பாடி மெயின் ரோட்டில் இயங்கி வருகிறது.

இங்கு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வரும் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறப்பு கடன் மேளாவில் நீட்ஸ் திட்டம் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்பட உள்ளன.

இதில், தகுதி பெறும் தொழில் களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும். முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும்.

இந்த வாய்ப்பை புதிய தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0416-2249821, 2249861 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in