Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM
போக்ஸோ வழக்கில் கைது செய்யப் பட்ட சுண்ணாம்பு காளவாசல் உரிமை யாளருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப் பளித்தது.
விருதுநகர் மாவட்டம், சேத்தூரைச் சேர்ந்தவர் முருகேசன் (47). சுண்ணாம்பு காளவாசல் நடத்தி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சேத்தூர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்தனர். வில்லிபுத்தூரில் உள்ள போக்ஸோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், முருகேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT