Published : 05 Dec 2021 04:08 AM
Last Updated : 05 Dec 2021 04:08 AM

மார்கழி மாத பூஜைகளுக்காக டிச. 16 முதல் - திருச்செந்தூர் கோயிலில் நடைதிறப்பு நேரம் மாற்றம் :

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் கோயிலில் மார்கழி மாத பூஜைகளுக்காக வரும் 16-ம் தேதி முதல் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) சி.குமரதுரை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தமிழ் மாதமான மார்கழி டிச. 16-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 13-ல் (மார்கழி 29) நிறைவு பெறுகிறது. மார்கழி மாதத்தில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 4.45 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 7.30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8.45 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை நடைபெறும்.

தொடர்ந்து மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

முக்கிய விழா நாட்களான டிச. 20-ம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும், என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x