கடலில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு :

கடலில் மூழ்கி  பள்ளி மாணவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னைக்காயல், நூறுவீடு பகுதியைச் சேர்ந்தவர் ரோசில்டன். இவரது மனைவி எல்ப்ரிடா. இவர்களது 3-வது மகன் ஜாப்ரின்(15), அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும் ஏசியா தெருவைச் சேர்ந்த கில்பர்ட் மகன் அலெக்ஸ் (15), தெற்குத்தெருவைச் சேர்ந்த ஆஸ்ரின் (15) ஆகியோர் நேற்று முன்தினம் மாலை புன்னைக்காயல் கடற்கரை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 பேரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. அவர்களது சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி இளைஞர்கள் அலெக்ஸ் மற்றும் ஆஸ்ரினை மீட்டு கரை சேர்த்தனர். ஆனால், ஜாப்ரினை காணவில்லை. இதுகுறித்துகடலோர காவல்படை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜாப்ரினை அப்பகுதி மீனவர்கள் மற்றும் திருச்செந்தூர் தீயணைப்புத்துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை புன்னைக்காயல் கடற்கரையில் ஜாப்ரினின் உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து மரைன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in