Published : 04 Dec 2021 03:09 AM
Last Updated : 04 Dec 2021 03:09 AM

தொ.பரமசிவன் நினைவு தின ஆய்வுக் கட்டுரை போட்டி : டிச. 8-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

மதுரை

கூடல் குழுவின் நிர்வாகி முன்னாள் பேராசிரியர் முத்துவேல் வெளியிட்ட அறிக்கை:

தொ.பரமசிவன் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘ தொ.பரமசிவன் படைப்புகள் - ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. மதுரை காமராசர் பல்கலை., மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., அழகப்பா பல்கலை., அன்னை தெரசா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

ஒவ்வொரு கல்லூரியிலும் இருந்து தலா 2 கட்டுரைகள் இடம் பெறலாம். கல்லூரி முதல்வர்களின் ஒப்புதலுடன் படைப்புகளை அனுப்ப வேண்டும். 8 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தொ. பரமசிவன் எழுதிய நூல்களில் இருந்து கட்டுரைகள் அமையவேண்டும். ஒரு நூலில் இருந்தோ அல்லது ஒப்பீட்டு முறையிலோ இருக்கவேண்டும். முனைவர் ஆ. அழகுசெல்வம், 5/997 பசும்பொன் தெரு, யாகப்பா நகர், மதுரை- 625020 என்ற முகவரிக்கு டிச.8-க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும். சிறந்த கட்டுரைக்கு டிச.18-ல் நடக்கும் பேராசிரியர் தொ.பரமசிவன் நினைவுதின ஆய்வரங்கில் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x