சிவகங்கை அருகே 4 மாதமாகியும்10-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இல்லை :

சிவகங்கை அருகே 4 மாதமாகியும்10-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இல்லை :
Updated on
1 min read

சிவகங்கை அருகே பள்ளி திறந்து 4 மாதங்களாகியும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே சேத் தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்.

6 முதல் 10-ம் வகுப்புகளில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம் ஆசிரியர்கள் இல்லை. 9, 10-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறந்து 4 மாதங்களாகியும் ஆசிரியர்கள் நியமிக்காததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

சேத்தூரைச் சேர்ந்த கண்ணுச்சாமி கூறுகையில், ‘இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம். விரைவில் ஆசிரியர்களை நியமிக்கா விட்டால் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,’என்றார்.

முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன் கூறுகையில், ‘ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in