Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM
திருச்சி/ கரூர்: உயிர்களைக் காப்பாற்றுதல், அரசு பொதுச் சொத்துக்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட வீரதீரச் செயல்கள் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு துணிச்சலுக்கான அண்ணா பதக்கம், விருது 2022-ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய ஆவணங்களுடன் (ஆங்கிலம் மற்றும் தமிழில்) விரிவான அறிக்கையை 3 பிரதிகளுடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு டிச.8-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இதேபோல, தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் கபீர் புரஸ்கார் விருது வழங்கி வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கு இவ்விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தொடர்புடைய ஆவணங்களுடன் டிச.7-ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கரூர் மாவட்டத்தில் அண்ணா பதக்கம் பெற தகுதியுடையோர், மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தாந்தோணிமலை என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் டிச.8-ம் தேதிக்குள் 3 நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT