Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு :

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும், கரோனா காரணமாக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கவும் பள்ளிக்கல்வித் துறையின் மூலம் கடந்த 8 வாரங்களாக பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் அடிப்படை விநாடி வினா போட்டி நடைபெற்றது.

இதில், மாநில அளவில் சிறந்து விளங்கிய கரூர் மாவட்டம் தென்னிலை அரசு உயர்நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவர் திவாகர் மற்றும் மாணவி ரம்யா ஆகியோர் டிச.8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 5 நாட்கள் கல்விச் சுற்றுலாவுக்காக துபாய் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை ஆட்சியர் த.பிரபுசங்கரை நேற்று முன்தினம் பாராட்டி வாழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x