குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் :

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் :
Updated on
1 min read

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் கரூர் பசுபதீஸ்வரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூடுதல் எஸ்.பி க்கள்கண்ணன், அசோக்குமார், கீதாஞ்சலி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், அவசர மற்றும் ஆபத்து நேரங்களில் குழந்தைகள் 1098, 100 போன்ற இலவச எண்களை உடனடியாக தொடர்புகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோல, கரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் எஸ்.பி அசோக்குமார் தலைமையிலும், சாரதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.ஐ சந்திரசேகர் தலைமையிலும் விழிப்புணர்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in