Published : 04 Dec 2021 03:10 AM
Last Updated : 04 Dec 2021 03:10 AM

அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் கைது :

அரியலூர்: தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக பாஜக அரியலூர் மாவட்டத் தலைவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி அரியலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 1-ம் தேதி பாஜக வர்த்தக அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் அரசுக்கு எதிராகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும், அரசை எச்சரிக்கும் வகையிலும் பேசியதாக, அரியலூர் காவல் நிலையத்தில் வாலாஜாநகரம் விஏஓ கனகராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் அய்யப்பன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரை ஜெயங்கொண்டத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று கைது செய்தனர்.

தொடர்ந்து, அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன்பேரில், ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 50 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x