Published : 04 Dec 2021 03:11 AM
Last Updated : 04 Dec 2021 03:11 AM

குமரியில் பரவலாக மழை: ஆற்றில் 3,200 கனஅடி நீர் வெளியேற்றம் :

குமரியில் நேற்று பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக பாலமோரில் 46 மிமீ மழை பதிவானது. அணைகளில் இருந்து 3,200 கனஅடி நீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை குறைந்திருந்தாலும், சாரல் மழை தொடர்கிறது. சாரல் மழையால் நேற்று மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவியது. நீர்ப்பிடிப்பு பகுதியான பாலமோரில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்துஅதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பாலமோரில் 46 மிமீ, சுருளோட்டில் 44, கொட்டாரத்தில் 42, நாகர்கோவில் மற்றும் சிவலோகத்தில் தலா 36, அடையாமடையில் 34, ஆனைக்கிடங்கில் 26 மற்றும் மயிலாடியில் 22 மிமீ மழை பெய்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.17 அடியாக உள்ளது. 1,055 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,018 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 74.56 அடியாக உள்ளது. 644 கனஅடி தண்ணீர் வருகிறது. 1,614 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்று அணை நீர்மட்டம் 16.30 அடியாக உள்ளது. 193 கனஅடி தண்ணீர் வருகிறது. 272 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. சிற்றாறு இரண்டு அணை நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. 128 கனஅடி தண்ணீர் வருகிறது. 224 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. அனைத்து அணைகளில் இருந்தும் மொத்தம் 3,200 கனஅடி தண்ணீர் ஆற்றில் பெருக்கெடுத்துள்ளது.

மழைக்கு மத்தியில் மீண்டும் புயல் எச்சரிக்கை நிலவுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. எனவே, அணை மற்றும் ஆற்றங்கரையோர பகுதிகளில் பொதுப்பணித்துறை, தீயணைப்பு மீட்பு துறையினர், வருவாய்த்துறையினர் முன்னெச்செரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x