Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

காட்டெருமை தாக்கியவர் உயிரிழப்பு :

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நஞ்சநாடு கோழிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (55). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டெருமை தாக்கியுள்ளது. படுகாயமடைந்த அவர், உதகையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இளைஞர் கைது : இந்நிலையில், கேத்தி அருகே காலில் காயத்துடன் நடமாடிய காட்டெருமையை, மது போதையில் இளைஞர் ஒருவர் குச்சியால் தாக்கினார். இதுதொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, தொடர்புடைய இளைஞரை வனத்துறையினர் தேடி வந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x