Published : 03 Dec 2021 03:07 AM
Last Updated : 03 Dec 2021 03:07 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,500 கனஅடியானது :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த 13-ம் தேதி அணை நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் விநாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையும் அதே அளவு தொடர்ந்த நிலையில், மாலை 4 மணியளவில் 10,500 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து மின்நிலையங்கள் வழியாக விநாடிக்கு 10,000 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x