விழுப்புரம் அருகேசாம்பார் கொட்டியதில் குழந்தை உயிரிழப்பு :

விழுப்புரம் அருகேசாம்பார் கொட்டியதில்  குழந்தை உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சாம்பார் கொட்டியதில் பலத்த காய மடைந்த குழந்தை உயிரிழந்தது.

விழுப்புரம் அருகே செங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். பெயிண்டரான இவர் மனைவி உமா. இத்தம்பதியினருக்கு கிஷோர்(5) என்ற குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் உமா சமையல் செய்தபோது சாம்பார் கொட்டியதில் கிஷோ ருக்கு பலத்த காயம் ஏற் பட்டது.

உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நேற்று காலை உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீஸார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in