மின்சாரம் பாய்ந்து  கட்டிட தொழிலாளி உயிரிழப்பு :

மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழப்பு :

Published on

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே வடக்கு வாட்டார் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்(45), கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இந்நிலையில், இவர்களின் வீட்டில் நேற்று மின் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, அதை சரிசெய்யும் பணியில் சங்கர் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சங்கர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். திருக்களார் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in