வீடுகள் முன் கழிவுநீர் தேங்கியதால் : திருச்செந்தூரில் பொதுமக்கள் திடீர் மறியல் :

வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கியதை கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கியதை கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

திருச்செந்தூர் சபாபதிபுரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர்வீடுகள் முன்பு தேங்கியது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. துர்நாற்றத்தால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் சபாபதிபுரம்- தெற்குரதவீதி சந்திப்பில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி(பொறுப்பு) பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேறும் வரைசிறு, சிறு பிரச்சினைகள் இருக்கும். உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in