பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு :

பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு :
Updated on
1 min read

தஞ்சாவூர் கரந்தை தைக்கால் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் நிஷாவர்ஷினி(17). இவர், பி.எஸ்.சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் பின்புறம் கோழிகளை கூண்டில் அடைக்கச் சென்றார். அப்போது, அங்கிருந்த பாம்பு கடித்ததில், மயங்கிக் கிடந்த நிஷாவர்ஷினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in