Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

மேல்மலையனூர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து :

கரோனா பெருந்தொற்று காரணத்தினால் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு வருகிற 4-ம் தேதி அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அன்று வழக்கமான தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாது என இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், செயல் அலுவலரான ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x