Published : 01 Dec 2021 06:39 AM
Last Updated : 01 Dec 2021 06:39 AM

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை :

பண்ருட்டி அருகே உள்ள எனதிரி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (29). விவசாய கூலித்தொழிலாளி. கடந்த 20.01.2019-ல்அதே பகுதியில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை தனசேகர் அன்பாக பேசி அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். அவரது பெற்றோர் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனசேகரை கைதுசெய்தனர். இந்த வழக்கு கட லூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. நீதிபதி எழிலரசி இவ் வழக்கில் நேற்று தனசேகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித் தும் தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 மாதத்துக்குள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரூ. 5 லட்சம் நிவாரண தொகை யாகப் பெற்று தர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போலீஸார் தனசேகரை கடலூர் மத்திய சிறை யில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக கலாசெல்வி ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x