ரூ.21 லட்சம் மொபைல்கள் ஒப்படைப்பு :

ரூ.21 லட்சம் மொபைல்கள் ஒப்படைப்பு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் மொபைல்கள் காணாமல் போன தாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து சைபர் கிரைம் கூடுதல் எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி, எஸ்.ஐ. ஆருண் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், ரூ.21 லட்சம் மதிப்பிலான 120 மொபைல்கள் மீட்கப்பட்டன.அவற்றை உரியவர்களிடம் ஒப் படைக்கும் நிகழ்ச்சி, மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் நடந்தது.

மாவட்ட எஸ்.பி. மனோகர் கலந்துகொண்டு மொபைலை பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in