காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி திருவண்ணாமலை சாலை முனிசிபல் குவாட்டர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மாதன் என்பவரது மகன் ஹரிராஜ் (17). இவர் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்தார். காரிய சடங்கு நிகழ்ச்சிக்காக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு தென்பெண்ணை ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக ஹரிராஜ் நீரில் மூழ்கினார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில், கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பள்ளி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு மாணவரின் சடலம் மீட்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in