

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்கள் இன்றைக்குள் (நவ.30) உடனடியாக விண்ணப்பத்தினை தொடர்புடைய கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். கல்வி உதவித் தொகைக்கான புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.