மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி ஆய்வு :

மத்திய சிறையில் சிறைத்துறை  டிஜிபி ஆய்வு :
Updated on
1 min read

திருச்சி மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகள் தங்கும் கட்டிடங்கள், நிர்வாக அலுவலகம், உணவு தயாரிப்பகம், சிறைவாசிகளுக்கான ஐ.டி.ஐ மற்றும் தொழில்கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். மேலும் சிறைவாசிகளின் மறுவாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், சிறை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாகவும் கேட்டறிந்தார். ஆய்வின்போது சிறைத்துறை டிஐஜி (பொ) பழனி, மத்தியசிறைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in