Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

மல்லப்பாடி அருகே - பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தல் :

பர்கூர் வட்டம் மல்லப்பாடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நிர்வாகி ரஜினி தலைமை வகித்தார்.வட்டப் பொருளாளர் கண்ணு, மத்திய, மாநில அரசியல் நிலை தொடர்பாக பேசினார். கூட்டத்தில், ‘மல்லப்பாடியில் இருந்து மரிமாணப்பள்ளிக்கு செல்லும் பாம்பாற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். கூட்டுறவு வேளாண் வங்கிகளில் உடனடியாக விவசாயி களுக்கு கடன் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்பவர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், துணை செயலாளர்கள் பவுன்ராஜி, சிவகுமார், தேவராஜ், ராஜேந்திரன், குணசேகரன், ஜீவானந்தம், சதீஷ், சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x