மலட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் உடல் மீட்பு :

மலட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேர் உடல் மீட்பு :
Updated on
1 min read

கடலூர் வட்டம் தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள ராசாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி(20). இவர் கடலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் முத்துவேல் மகன் அபினேஷ்(17). இவர் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் நண்பர்கள் 2பேரும் அவர்களின் ஊருக்கு அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் உள்ள மலட்டாறுக்கு சென்று குளித்துள்ளனர்.

அப்போது 2 பேரும் ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். கரையில் இருந்து இதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீஸார் மற்றும் கடலூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் மலட்டாற்றில் 2 பேரையும் தேடினர்.

இரவு வரை இந்த தேடுதல் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று காலை 2-வது நாளாக மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது 2 பேரின் உடல்களும் கிடைத்தன. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in