16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் :

16 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் :
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள பெரிய கண்மாய் 2005-ம் ஆண்டு நிரம்பியது. அதன்பிறகு முழுமையாக நிரம்பியது கிடையாது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பெரிய கண்மாய் முழுமையாக நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் முன் னோர்களின் பாரம்பரிய முறைப்படி மேளதாளத்துடன் வழிபாடு நடத்தினர். மேலும் இளைஞர்கள் நீந்தி சென்று கண்மாயின் மையப்பகுதியில் உள்ள நாட்டுக்கல்லில் பொட்டு வைத்த பானையை கவிழ்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in