கிரானைட் கற்களுடன் லாரி பறிமுதல் :

கிரானைட் கற்களுடன் லாரி பறிமுதல் :
Updated on
1 min read

பர்கூர் அருகே கிரானைட் கற்கள் ஏற்றிய நிலையில் நின்ற டாரஸ் லாரியை கற்களுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி கனிம வளப்பிரிவு துணை வட்டாட்சியர் மதன்ராஜ் தலைமையிலான குழுவினர் சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் கந்திகுப்பம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற டாரஸ் லாரியை சோதனை செய்தபோது அதில் 2 பெரிய கிரானைட் கற்கள் அனுமதியின்றி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகும்.

இதுதொடர்பாக மதன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து லாரியையும், கிரானைட் கற்களையும் பறிமுதல் செய்து, லாரி யாருக்கு சொந்தமானது, எங்கிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in