இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு :

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருட்டு :
Updated on
1 min read

திருப்பூர் வேலம்பாளையம் காவிலிபாளையம்புதூரை சேர்ந்தவர் வசந்த்குமார் (39). பனியன் நிறுவன உரிமையாளர். அவிநாசியில் உள்ள இரு வங்கிகளில் நேற்று முன்தினம் மொத்தம் ரூ.1.80 லட்சத்தை எடுத்துக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு கீழ் உள்ள பெட்டியில் வைத்திருந்தார். பிறகு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை முன் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் திருட்டுப்போனது தெரியவந்தது. புகாரின் பேரில், அவிநாசி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை இளைஞர் ஒருவர் திருடிச் சென்றது தெரியவந்தது. அந்த இளைஞரை அவிநாசி போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in