வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு :

வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (28). ஆண்டிபட்டியை சேர்ந்தவர் சரவணன் (27). இருவரும், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மகேந்திரன் என்பவரது இறைச்சிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளனர். நேற்றுமுன் தினம் இரவு சொந்த ஊரிலிருந்து ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் வந்தனர். கணக்கம்பாளையத்தில் உள்ள மகேந்திரன், தனது வீட்டில் இருவரையும் தங்கவைத்தார்.

நேற்று காலை இருசக்கர வாகனத்தில், ரமேஷ்குமாரும், சரவணனும் இறைச்சிக் கடைக்கு வேலைக்கு சென்றனர். அப்போது பெருமாநல்லூர் மீனாட்சி நகர் அருகே சென்றபோது எதிரே பெருமாநல்லூரில் இருந்து பனியன் தொழிலாளர்களை ஏற்றிவந்த சிற்றுந்து மோதியது. இதில், ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சரவணன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in