‘ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் மனுக்கள் மூலம் மக்களை நாடும் நிகழ்வு’ :

‘ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் மனுக்கள் மூலம் மக்களை நாடும் நிகழ்வு’ :
Updated on
1 min read

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, கே.சுப்பிரமணி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ‘ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நாளை (நவ.29) மனுக்கள் மூலம் மக்களை நாடும் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் மேற்கண்ட பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு, பொது சுகாதாரம், உதவித்தொகை மற்றும் இதரகோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கலாம். இந்நிகழ்ச்சியில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். எனவே, கோரிக்கை மனுக்களை துறைரீதியாக தனித்தனி மனுக்களாக எழுத்துபூர்வமாக அமைச்சரிடம் அளித்து பயன்பெறலாம்,’ என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in