புகையிலை பறிமுதல் 4 பேர் கைது :

புகையிலை பறிமுதல்  4 பேர்  கைது  :
Updated on
1 min read

திருச்செந்தூர் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், அதில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 1,300 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்தன.

வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருநெல்வேலி ராமையன்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் இசக்கிராஜா(32), நாங்குநேரி ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த பிச்சைபழம் மகன் கதிரேசன்(25), திருநெல்வேலி சங்கர் நகரை சேர்ந்த பரமசிவன் மகன் பிரபாகரன்(35), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த கல்யாணம் மகன் பிரசாந்த்(25) எனத் தெரியவந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in