மின்சாரம் தாக்கி குழந்தை மரணம் :

மின்சாரம் தாக்கி குழந்தை மரணம் :
Updated on
1 min read

திருநெல்வேலி அருகே உள்ள பொன்னாக்குடி காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் காசி.இவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு மாரி கிருஷ்ணன் (3), சங்கரி (6 மாதம்) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். இக்குடும்பத்தினர் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தில் தனியார் கல்குவாரியில் கூலிவேலை செய்து வருகின்றனர். சீலாத்திகுளத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். வீட்டில் வைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸை, குழந்தை மாரிகிருஷ்ணன் எடுத்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே மாரிகிருஷ்ணன் உயிரிழந்தான். ராதாபுரம் போலீஸார் விசாரிக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in