நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் - போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கல் :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் -  போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு வழங்கல் :
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி திருவாரூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

இப்பணியை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கட்சியின் அமைப்புச் செயலாளர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட பாசறை செயலாளர் கலியபெருமாள், நகரச் செயலாளர்கள் திருவாரூர் மூர்த்தி, திருத்துறைப்பூண்டி சண்முகசுந்தர் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்டத்திலுள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சிகள், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னி லம், வலங்கைமான், பேரளம் ஆகிய பேரூராட்சிகளில் போட்டி யிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இப்பணி 3 நாட் களுக்கு நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in