Published : 27 Nov 2021 03:09 AM
Last Updated : 27 Nov 2021 03:09 AM

‘அரசு விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’ :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 85% எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கும், 10% பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கும், 5% இதர பிரிவினருக்கும் விகிதாச்சார அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு 5 இடங்கள் ஏற்படுத்தப் படும்.

விடுதியில் சேர பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை விடுதி காப்பாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x