Published : 26 Nov 2021 03:08 AM
Last Updated : 26 Nov 2021 03:08 AM
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தபோது, நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. ரயில் நிலையங்களில் பயணிகள் தவிர மற்றவர்கள் கூடுவதைத் தவிர்க்க ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தொற்றுப் பரவல் குறைந்துள்ள நிலையில், நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம் ஜங்ஷன், ஈரோடு ஜங்ஷன், கோவை ஜங்ஷன், கரூர் ஜங்ஷன், திருப்பூர் ஆகிய 5 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் இன்று (26-ம் தேதி) முதல் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT