முன்னாள் படைவீரருக்கான நிம்மதி இல்லம் தொடக்கம் :

முன்னாள் படைவீரருக்கான நிம்மதி இல்லம் தொடக்கம் :
Updated on
1 min read

முன்னாள் படைவீரர்கள், போர் விதவையர் மயிலாப்பூரில் செயல்படும் நிம்மதி இல்லத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

போர் விதவையர் நலச்சங்கத்தால் சென்னை மயிலாப்பூரில் ‘நிம்மதி இல்லம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில் வயது முதிர்ந்த முன்னாள் படைவீரர்கள், போர் விதவையர்கள் சேர்ந்து பயன்பெறலாம். நிம்மதி இல்லத்தின் சேவைகள் பற்றிய விவரங்களை முன்னாள் படைவீரர்கள் அலுவலகம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in