

மதுரை, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று இடியுடன் கனமழை கொட்டியது.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 5 மணிக்கு நேரத்துக்கும் மேலாக மழை நீடித்தது. இதனால் கோரிப்பாளையம், பாண்டிகோவில் சந்திப்பு, கே.கே.நகர் சாலை உட்பட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
வைகை ஆற்றிலும் தண்ணீர் கூடுதலாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்-17.6, மண்டபம்-11, பள்ளமோர்குளம்-5, ராமேசுவரம்-76.2, பாம்பன்-42.1, தங்கச்சிமடம்-30.5, திருவாடானை-8.4, தொண்டி-8.8, தீர்த்தாண்டதானம்-15, வட்டாணம்-8.4, ஆர்.எஸ்.மங்கலம்-5.5, பரமக்குடி-3.9மி.மீ, கமுதி-2.8, கடலாடி-3.2, வாலிநோக்கம்-3.8 மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.14 மி.மீட்டராகும்.
திண்டுக்கல்
மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை 25 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
தேனி
சிவகங்கை
விருதுநகர்