குழந்தை பிறந்த 5 நாளில் - இளம்பெண் மர்ம மரணம் : சார் ஆட்சியர் விசாரணை

காவியா. (கோப்புப்படம்)
காவியா. (கோப்புப்படம்)
Updated on
1 min read

திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் காவியா(24). இவருக்கும், இவரது உறவினரான வாணியம்பாடி அருகே மிட்டூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன்(40), என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

இந்நிலையில், பிரசவத்துக்காக கடந்த வாரம் காவியாவை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி யில் அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அவரது பெற்றோர் இரு நாட்களுக்கு முன்பு காவியாவை மருத்துவமனையில் இருந்து ஜோலார்பேட்டைக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் மர்மமான முறையில் காவியா உயிரிழந்து கிடந்தார். உடனே, காவியா உடலை அவரது உறவினர்கள் மீட்டனர். பின்னர் தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் முருகன் வீட்டுக்கு சென்று காவியா உடலை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து காவியாவின் தாயார் சௌந்தரி கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் காவியா மரண வழக்கு திருப்பத்தூர் சார் ஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in