Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

சேலம்  சேலம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏற்காடு மின் பாதையில் காவேரி பீக் வரை இன்று (25-ம் தேதி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது

சேலம்

 சேலம் அஸ்தம்பட்டி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஏற்காடு மின் பாதையில் காவேரி பீக் வரை இன்று (25-ம் தேதி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, ஒன்டிகை, பட்டிபாடி வேலூர், சேர்வராயன் மலை, நாகலூர், செம்மநத்தம், காவேரி பீக், மங்களம், சொரக்காப்பட்டி, பூமரத்தூர், வீராச்சியூர், வேப்படி, கரடியூர், சொனப்பாடி, கடுக்காமரம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சேலம் கிழக்குக் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

தருமபுரி

 தருமபுரி மாவட்டம் மொரப்பூர், இருமத்தூர் துணை மின் நிலையப்பகுதிகளில் இன்று (25-ம் தேதி) பராமரிப்புப் பணி நடைபெறுவதால், மின் நிறுத்தம் அறிவிக் கப்பட்டுள்ளது.

எனவே, இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை மொரப்பூர், ராசலம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, கிட்டனூர், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், கம்பைநல்லூர், கே.ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், மல்லமாபுரம், பள்ளம்பட்டி, பட்டகபட்டி, கெலவள்ளி, மரியம்பட்டி, காடையாம்பட்டி, இருமத்தூர், திப்பம்பட்டி மற்றும் சுற்றுப் பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

 கிருஷ்ணகிரி மின்கோட்டம் காவேரிப்பட்டணம், ஒட்டப்பட்டி, குட்டிகவுண்டனூர் துணை மின் நிலையத்தில் இன்று (25-ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் காவேரிப்பட்டணம் நகரம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வர மடம், சவுளூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், தேவர்முக்குளம், தேர்பட்டி, பாலனுர், நெடுங்கல், ஜெகதாப், பாளையம், மில்மேடு, இந்திரா நகர், மேல்மக்கான், சாலாமடுவு, பனகமுட்லு, தளியூர், தொட்டிப்பள்ளம், சார்ப்பர்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இன்று காலை 9 முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் வேல் தெரிவித்துள்ளார்.

காரிமங்கலம்

 காரிமங்கலம் துணை மின் நிலைய பகுதிகளில் இன்று (25-ம் தேதி) மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை காரிமங்கலம், அனுமந்தபுரம், அண்ணாமலை அள்ளி, தும்பல அள்ளி, கெண்டிக்கான அள்ளி, பெரியாம்பட்டி, வேலம்பட்டி, நாகரசம்பட்டி, நெடுங்கல், திண்டல், பந்தார அள்ளி, எச்சன அள்ளி, கே.மோட்டூர், கோவிலூர், ஏ.சப்பாணிப்பட்டி, அக்ரஹாரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என பாலக்கோடு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x