திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் :

திருவள்ளூரில் நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்     :
Updated on
1 min read

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தை நவ.19-ம் தேதி நடத்த ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால், அதிகன மழை காரணமாக கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

தள்ளிவைக்கப்பட்ட இக்கூட்டம் நாளை (நவ. 26) காலை 10 மணியளவில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று, விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிக்கும் ஏற்படும் குறைகளுக்குத் தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in