கள்ளக்குறிச்சி அருகே மர்மமான முறையில் உயிரிழந்த - மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி மறியல் :

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் உறவினர்கள்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவனின் உறவினர்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அருகே இருவேறு வகுப்பைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவனும், மாணவியும் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் மாணவனின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த, அதே ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் சோமண்டார்குடி ஆற்றங் கரைப் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய படியும், மாணவி ஆற்றில் மிதந்த படியும் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே இருவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பதுவிசாரணையில் தெரியவந்ததுள்ள தாக காவல் துறையினர் தெரிவித் தனர்.

இந்த நிலையில் மாணவரின் உறவினர்கள், நேற்று கள்ளக் குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரேதிரண்டனர். மாணவர் உடலில் காயம் இருப்பதாகவும், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்தனர். முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் கள்ளக்குறிச்சி போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தியதால் மாணவரின் உறவி னர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in