Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM
திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் ரூ.3.5 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று சிவகங்கை ஆட்சியர் தெரிவித்தார்.
திருப்புவனம் அருகே ஓடாத்தூர், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சிறுவனூர் உள்ளிட்ட 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைத்து தேவைகளுக்கும் பழையனூருக்கு வந்து செல்கின்றனர்.
பழையனூரில் இருந்து அக்கிராமங்களுக்கு செல்லும் சாலையில்ஓடாத்தூர் அருகே கிருதுமால் நதி குறுக்கே செல்கிறது.தரைப்பாலம் உள்ள போதிலும் நதியில் தண்ணீர் செல்லும் காலங்களில் இச்சாலையை கடப்பது சிரமம். தற்போது கிருதுமால் நதியில் தண்ணீர் செல்வதால் 16 கிராமங்கள் போக்குவரத்தின்றி துண்டிக்கப்பட்டன.
இதையடுத்து நபார்டு வங்கி நிதியுதவியுடன் நெடுஞ்சாலைத்துறை (நபார்டு கிராமச் சாலைகள்) மூலம் ரூ.3.5 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT