மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் - காங்கிரஸ் கட்சியினர் பேரணி :

ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில்  பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர்.  படம்: எல்.பாலச்சந்தர்
ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர். படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் பினுலால் சிங், மாநிலச் செயலாளர் அடையாறு பாஸ்கரன், திருவாடானை எம்எல்ஏ கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரண்மனைவாயிலில் இருந்து தொடங்கிய பேரணி, சாலைத்தெரு வழியாக மீண்டும் அரண்மனை வாயிலை வந்தடைந்தது.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாதுஎன்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in