Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

பாலமோரில் 19 மி.மீ. மழைப் பதிவு :

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. அதிகபட்சமாக நேற்று பாலமோரில் 19 மி.மீ. மழை பதிவானது.

சுருளோடு, கோழிப்போர் விளையில் தலா 16, குருந்தன்கோட்டில் 13, பேச்சிப்பாறையில் 8 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை 43 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 606 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 521 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியாக உள்ள நிலையில், அணைக்கு 532 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 16.60 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து நேற்று 272 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பொய்கை, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணை ஆகியவை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x