Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் :

நாகர்கோவில்: விலைவாசி உயர்வு, பொருளாதார சீர்கேடு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி, மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. குளச்சலில் நடந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்துக்கு பிரின்ஸ் எம்எல்ஏ தலைமை வகித்தார். விஜய் வசந்த் எம்பி, கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர். குளச்சல் இரும்பிலியில் தொடங்கிய பயணம், காமராஜர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x