Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

40 ஆண்டுகளுக்குப் பிறகு தூர் வாரப்பட்ட வாய்க்கால் :

கும்பகோணம் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து நகராட்சி பகுதிகள் வழியாக உள்ளூர், தேப்பெருமாநல்லூர் பகுதிக்கு பாசன வாய்க்கால் செல்கிறது.

இந்த வாய்க்காலில் நகராட்சி பகுதிகளில் மக்கள் கழிவுநீரை விடுவதுடன் குப்பையையும் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், மழைக்காலங்களில் அதிகளவில் வரும் தண்ணீர் வாய்க்கால் கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து, உள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், 40 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளதாகக் கூறி, மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வசதியாக வாய்க்காலை தூர் வார வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, எம்எல்ஏ உத்தரவின்படி இந்த வாய்க்கால் நேற்று தூர் வாரப்பட்டது. இதை எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், ஒன்றியக்குழு துணைத் தலைவர் தி.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், ஒன்றியக் குழு உறுப்பினர் கோமதிசண்முகம், உள்ளூர் ஊராட்சித் தலைவர் வீ.செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கூறியதாவது: காவிரியில் பிரியும் உள்ளூர் பாசன வாய்க்கால் தேப்பெருமாநல்லூர் வரை செல்கிறது. இந்த வாய்க்காலின் இறுதி பகுதியில் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டதால் தண்ணீர் செல்ல தடையாக இருந்தது. இதனால், உள்ளூர் ஊராட்சியில் மழைநீர் தேங்கியது.

எனவே வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்லும் வகையில் இந்த வாய்க்கால் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தூர் வாரப்பட்டுள்ளது. இதனால் மழை, வெள்ளக் காலங்களில் உள்ளூர் ஊராட்சியில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x