Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

இந்திய மாணவர் சங்கத்தினர் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராகத் தனிச் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வே.அர்ஜூன் தலைமை வகித்தார். மாநிலத் துணைச் செயலாளர் கோ.அரவிந்த்சாமி, கிளைத் தலைவர் பெ.வீரமுத்து உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x