Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை :

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த சுழற்சி இன்று (நவ.25) தாழ்வு பகுதியாக மாறவுள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு சற்று அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மன்னார்குடி, திருவாரூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டியில் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.25) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x