Published : 25 Nov 2021 03:14 AM
Last Updated : 25 Nov 2021 03:14 AM

தஞ்சாவூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் :

தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (நவ.26) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது

இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய துறைகள் குறித்து கருத்துகளை தெரிவிக்கலாம்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை நாளை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விவசாயிகள் அளிக்கும் மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்ற பின்னர் அளிக்க வேண்டும்.

மேலும், கரோனா தொற்று பரவவை கட்டுப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து கலந்துகொள்ள வேண்டும் என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x